
தங்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர் தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தொகுதியைச் சுற்றிவளைத்தபோது, மான் இறைச்சியை வெட்டி துப்புரவு செய்து பொதியிட்டுக் கொண்டிருந்த சந்தேக நபர்களையே கைது செய்ததாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள தொப்பிகல (குடும்பிமலை) மலைப்பகுதிக் காடுகளிலிருந்து இறைச்சிக்காக இந்த மான்களும் மரைகளும் வேட்டையாடப்பட்டதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
0 Comments