சென்னை ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் பாலசுப்பிரமணியன், முருகேசன் ஆகியோர் மாஞ்சா நூல் எவ்வாறு கழுத்தை அறுக்கிறது என்பதை வெள்ளரிக்காய், முள்ளங்கி ஆகியவற்றை மாஞ்சா நூல் மூலம் அறுத்து காண்பித்தார்கள். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
காற்றாடி மாஞ்சா நூல் ரத்தகுழாயில் ஆழமாக அறுத்துவிடுகிறது. இதனால் ரத்த இழப்பு அதிகம் ஏற்பட்டுவிடுகிறது. முதல் உதவி சிகிச்சை மூலம் ரத்த இழப்பை தடுத்து நிறுத்த முடியாது. கழுத்து அறுபட்ட 10 நிமிடத்தில் உயிர் போய்விடும். கழுத்து அறுபடாமல் கழுத்து இறுக்கப்பட்டும் உயிர் இழப்பு ஏற்படும். இதில் மேலோட்டமாக பார்த்தால் காயம் லேசாக இருக்கும். ஆனால் உள்காயம் பலமாக ஏற்பட்டும் உயிர் இழப்பு ஏற்படும். கழுத்து அறுபட்டவுடன் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபடுகிறது. இதுதான் உயிர் இழப்பை விரைவாக ஏற்பட செய்கிறது.
வெளியேறும் ரத்தம் மூச்சு குழாய்க்குள் போய் உறைந்து அடைத்து, மூச்சு திணறல் ஏற்பட்டும் உயிர் போக வாய்ப்பு உள்ளது. மாஞ்சா நூல் ஆபத்தானது. அதை பயன்பாட்டுக்கு அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு டாக்டர்கள் பாலசுப்பிரமணியன், முருகேசன் ஆகியோர் தெரிவித்தனர்.
காற்றாடி மாஞ்சா நூல் ரத்தகுழாயில் ஆழமாக அறுத்துவிடுகிறது. இதனால் ரத்த இழப்பு அதிகம் ஏற்பட்டுவிடுகிறது. முதல் உதவி சிகிச்சை மூலம் ரத்த இழப்பை தடுத்து நிறுத்த முடியாது. கழுத்து அறுபட்ட 10 நிமிடத்தில் உயிர் போய்விடும். கழுத்து அறுபடாமல் கழுத்து இறுக்கப்பட்டும் உயிர் இழப்பு ஏற்படும். இதில் மேலோட்டமாக பார்த்தால் காயம் லேசாக இருக்கும். ஆனால் உள்காயம் பலமாக ஏற்பட்டும் உயிர் இழப்பு ஏற்படும். கழுத்து அறுபட்டவுடன் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபடுகிறது. இதுதான் உயிர் இழப்பை விரைவாக ஏற்பட செய்கிறது.
வெளியேறும் ரத்தம் மூச்சு குழாய்க்குள் போய் உறைந்து அடைத்து, மூச்சு திணறல் ஏற்பட்டும் உயிர் போக வாய்ப்பு உள்ளது. மாஞ்சா நூல் ஆபத்தானது. அதை பயன்பாட்டுக்கு அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு டாக்டர்கள் பாலசுப்பிரமணியன், முருகேசன் ஆகியோர் தெரிவித்தனர்.
0 Comments