Subscribe Us

header ads

புத்தளம் பிரதேசத்தின் சிறுவர் அபிவிருத்தியில் WODEPT

-The Puttalam Times-

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் முற்றாக அழிந்த ஐப்பான் நாடு, சுமார் 50 வருடங்களில் உலகின் முன்னணி நாடாக முன்னேற்றம் அடைந்தமைக்கான முதற் காரணம், சிறுவர்களை முன்னேற்றியமை ஆகும். குறிப்பாக ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய கொள்கையை வகுத்து அதன் பிரகாரம் சிறுவர்களை அபிவிருத்தி செய்தது.



இதனடிப்படையில் இலங்கை அரசும் சிறுவர்களை அபிவிருத்தி செய்வதில் முனைப்புடன் செயல்படுகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இலங்கை அரசின் சிறுவர் அபிவிருத்தி நடவடிக்கைகளை சிறப்புற மேற்கொள்வதற்கு அரச சார்பற்ற நிறுவனமான WODEPT (வொடெப்ட்) நல்கும் பங்களிப்பை இவ்விடம் குறிப்பிடுவது அவசியம். அந்த வொடெப்ட்டினால் மேற்கொள்ளப்படும் சிறுவர் அபிவிருத்திப் பணிகள் சிலவற்றை காண்போம்.

நான் விசேடமானவன்
‘நான் விசேடமானவன் – என்னைப் போல் இவ்வுலகில் வேறு எவருமில்லை’ என்ற தொனிப்பொருளில் வழங்கப்படும் சிறப்புப் பயிற்சி 2015.08.15 ஆம் திகதி கரிகட்டி ‘சீ லயன்’ சிறுவர் சங்க அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டது. சிறுவர்கள் துஷ்பிரயோகங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வது தொடர்பாக இப் பயிற்சியில் அறிவூட்டப்படும். மேற்படி நிகழ்ச்சியை வொடெப்ட் தொண்டரான பலதேவ பண்டார ஏற்பாடு செய்தார்.


மதுபானம் மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வு
2015.08.22 ஆம் திகதி அபயபுர, சேனைக்குடியிருப்பு கிராமத்தில் வொடெப்ட்ட நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஏ.எம். ரிபாஸ் மேற்படி விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிங்கள மொழிமூலம் நடத்தினார். இந் நிகழ்ச்சியில் 33 சிறுவர்களும் இளைஞர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். வொடெப்ட் சமூக அணிதிரட்டல் அதிகாரி எம்.எப் சுபியானி, தொண்டரான அயாஷா மதுசானி ஆகியோர் இந் நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பு செய்தனர்.


சிறுவர் சங்க அங்கத்தவர்களுக்கான உதவிகள் தில்லையடி மகளிர் சங்கத்தின் ஊடாக ‘ஜொலிக்கு நட்சத்திரம்’ சிறுவர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 55 சிறுவர்களுக்கு பாடசாலை சீருடைக்கான வெள்ளைத் துணி அன்பளிப்பு செய்யும் நிகழ்வு 2015.08.29 ஆம் திகதி தில்லையடியில் நடைபெற்றது. தில்லையடி மகளிர் சங்கத்தின் தலைவி காந்தி ஜராகணியின் ஏற்பாட்டில் இவ் அன்பளிப்புக்குத் தேவையான நிதி சேகரிக்கப்பட்டது.

புத்தளம், முந்தல், கல்பிட்டி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நிறுவப்பட்டுள்ள வொடெப்ட்டின் சிறுவர் சங்கங்கள், கிராம செயற்பாட்டுக் குழுக்களின் ஊடாக ஆரம்பப் பிள்ளைப் பருவம் மற்றும் சிறுவர்களுக்கான அபிவிருத்திப் பணிகள் நடத்தப்படுகின்றன.

தகவலும் படங்களும்: எம்.எச்.எம். சுபியானி

Post a Comment

0 Comments