தகுதி அந்தஸ்து பாராமல் தற்போதைய அரசாங்கத்தினால் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்க சிலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொண்டு தவறு செய்திருந்தார்கள் என்றால் அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் பின்வாங்குவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விமல் வீரவன்ச, ஜொன்ஸ்டன் பிரனாந்து, எஸ்.எம்.சந்திரசேனக, ரோஹித அபோகுணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கடந்த காலங்களில் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments