நேற்று வெள்ளிக்கிழமை மக்கா அல் மஸ்ஜிதுல் ஹராமில், தனியார் கொம்பனிக்கு சொந்தமான மாபெரும் கிரேன் விழுந்து ஏற்பட்ட பாரிய விபத்த்துக்கு கடுமையான காற்று, கன மழை, மற்றும் புனித மக்கா நகரில் ஏற்பட்ட மோசமான வானிலை என்பனவே காரணம் அல் மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா மஸ்ஜித்) மற்றும் அல் மஸ்ஜிதுன் நபவி (மதீனா மஸ்ஜித்) விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த சபையின் உத்தியோகப் பூர்வ பேச்சாளர் அஹ்மத் பின் முஹம்மத் அல் மன்சூரி இது தொடர்ப்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இந்த சம்பவம் மக்கா நேரப்படி 5:10 மணியளவில் ஏற்பட்டது. அதன் போது புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மஃரிப் தொளுகைக்காவும், தவாப் மற்றும் ஸஃயி ஆகிய கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும் கூடியிருந்தமையே அதிக உயிர் சேதம் ஏற்பட காரணமாக அமைந்தது.
அந்த நேரத்தில் மணிக்கு 60 கி.மி. வேகத்தில் காற்று வீசியதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்றவுடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதுகாப்பு விரிவிற்கு சொந்தமான 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள், 68 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வண்டிகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களை வைத்திசாலைக்கு கொண்டு செல்லும் பணிகள் இடம்பெற்றது.
அதேவேளை மன்னர் சல்மானின் ஆலோசகரும், புனித மக்கா நகர அமீருமான காலித் அல் பைசல் சம்பவ இடத்திற்கு உடன் விரைந்து பார்வையிட்டதுடன், விபத்திற்கான காரணம் தொடர்ப்பில் விசாரணைகள் நடாத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கோரியுள்ளார். என அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments