ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கற்பிட்டிப் பிராந்தியக் கூட்டம் கடந்த 2015 செப்டம்பர் 04 ம் திகதி பி.ப. 04.30 மணிக்கு திகழி பைசுல் இஹ்ஸான் இல்லத்தில் இடம் பெற்றது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அன்மையில் இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் அக்கட்சி சார்பாக போட்டியிட்டவருமான ஏ.எச்.பைரூஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில், உயர்பீட உறுப்பினர்களான புத்தளம் ஜேளபர் மரைக்கார், நாத்தான்டிய பகுதியைச் சேர்ந்த ரிழ்வான் ஹாஜியார் ஆகியோருடன் நுரைச்சோலையைச் சேர்ந்த மூத்த போராளியான வஹாப் ஹாஜியார், கனமூலையைச் சேர்ந்த சன்ஹிர் மௌலவி (அதிபர் கனமூலை முஸ்லிம் வித்தியாலயம்) கொத்தாந் தீவைச் சேர்ந்த பதுர்தீன், மன்னார் பகுதியைச்சேர்ந்த (நுரைச்சோலையில் வசிக்கும்) தொழிலதிபர் அஸ்வர் ஆகியோரின் சிறப்புப் பங்களிப்புடன் கல்பிட்டி பிரதேச சபையை பிரதிநிதித்துவப் படுத்தும் நூற்றுக்கும் அதிகமான போராளிகளிகள் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், நடை பெறவிருக்கும் பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாகவும் பல்வேறுகவனம் செலுத்தப்பட்டதுடன் கட்சியினை கிராம மட்டத்திலிருந்து மென்மேலும் வலுவூட்டி முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பிரதேச சபைத் தேர்தல் வட்டார முறையில் நடைபெறுமாகவிருந்தால் தற்பொழுது வட்டாரம் பிரிக்கப்பட்ட முறையில் பிரசேத்தில் வசிக்கும் முஸ்லிம் தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதுடன் இது தொடர்பான விசேட அறிக்கை தேசியத் தலைவருக்குக் கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் புத்தளம் தொகுதியில் கற்பிட்டி பிரதேச சபை, புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை, வனாத்தவில்லு பிரதேச சபை ஆராச்சிக் கட்டுவ பிரதேச சபை ஆகியவற்றில் எதிர்வரும் தேர்தல்களில் தலைவர் அல்லது அதிக பிரதிநிதிகளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வென்றெடுப்பதாகவிருந்தால் பாராளுமன்ற தேசியப்பட்டியல் முதல் இரண்டரை வருடங்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகள் மேட்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரேரனையினை குறிச்சிபிட்டியைச் சார்ந்த ஜசூர் அவர்களினால் முன்மொழியப்பட்டதுடன் அப்பிரேரனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை இக்கூட்டத்தின் விசேட அம்சமாகும்.
இறுதியாக ஏ.எச்,பைரூஸ் அவர்கள் உரையாற்றுகையில், குறுகிய காலத்தில் அதாவது 28 நாட்களில் 28000 யிரம் வாக்குகளை பெற்றுத்தந்த வாக்காளர்களுக்கும், அதற்காக உழைத்த போராளிகளுக்கும் தமது நன்றிகளையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொன்டார்.
-Mohamed Nawfal-
0 Comments