நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டு ஒன்றாக இணைந்து நாட்டில் நல்லாட்சியை பாதுகாப்பதற்கு மேற்கொண்டிருக்கும் முயற்சி மிகவும் பெறுமதியானதென துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இன்னமும் சில தரப்புகள் இனவாதத்தை பரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும், குறித்த சிலர் மீண்டும் அதிகாரத்திற்கு வருதற்காக பெரிய அளவிலான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கிடைத்த வெற்றியினை ஒருபோதும் பின் திரும்ப இடமளிக்க போவதிவ்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments