Subscribe Us

header ads

புதிய அனுபவங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது – அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி

கடந்த எட்டு மாதங்களில் நாட்டின் அரசியலில் புதிய அனுபங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
பல கட்சிகளின் உதவியுடன் மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சி செய்த 100 நாட்களைக் கொண்ட தற்காலிக அரசாங்கத்தில் புதிய வரவு – செலவுத்திட்டத்திற்கும், 19ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கும் சுதந்திர முன்னணி ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. அப்போதே தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்காக நாம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளித்திருந்தன.
பிரதான கட்சிகள் இரண்டு இணைந்து அரசாங்கமொன்றை அமைக்கும்போது தோன்றும் சிக்கலின் நிலைமை குறித்து அறிந்திருப்பது அவசியம். அங்கே அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சு பதவிகளை வழங்கும்போது பல சிக்கல்கள் தோன்றிய போதிலும், அதற்காக ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று மாவட்ட அபிவிருத்தி தலைவர்கள் பதவி, செயற்குழு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் பல நிறுவனங்கள் என்பவற்றுக்கு வழங்கும் பரவலாக்கப்பட்ட நிதியினை பகிர்ந்தளிக்கும் போது, அனைவருக்கும் சமமாக கிடைக்கும் வகையில் அந்நடவடிக்கையை மேற்கொள்வேன்.
பிரதமரும் நானும், பொது சபை ஒன்றை அமைத்து, அரச நிறுவனங்களில் ஆட்களை இணைக்கும்போது, பொருத்தமானோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிறுவனங்களில் நியமனங்கள் வழங்கப்படும்போது, சபை ஒன்று உருவாக்கப்படும். ஆயினும் அமைச்சர்கள் அதில் கோரிக்கை விடுக்கலாம். அதில் மிகவும் பொருத்தமானவர் நியமிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 
01020304

Post a Comment

0 Comments