தேசிய அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள் அடுத்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இன்னும் 50 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 48 பேருக்கும், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் 45 பேருக்குமான அனுமதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த பாராளுமன்றத்தில் பெற்றிருந்தார்.
இருப்பினும், நேற்றைய தினம் 43 பேருக்கே அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. இன்னும் அமைச்சரவை அந்தஸ்துள்ள 5 அமைச்சர்களும், ஏனைய 45 அமைச்சர்களும் நியமனம் பெறவுள்ளனர். இவர்களே அடுத்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
0 Comments