மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் களஞ்சியசாலைகளில் நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் திஸ்ஸமகாராம நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் இன்று விளக்கமளித்தனர்.
இதற்கமைய, சந்தேகநபர்கள் நாளை காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்துவதற்காக நேற்று (02) நெல் கொண்டுசெல்லப்பட்டபோது குறித்த சந்தேகநபர்கள் உள்ளிட்ட மேலும் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
0 Comments