Subscribe Us

header ads

முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதற்கு நான் விரும்பவில்லை – கருணாவின் இனவாதம் (VIDEO)


மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதற்கு நான் விரும்பவில்லை என கருனா அம்மான் தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சியான புதிய தலை முறைக்கு வழங்கிய விசேட செவ்வியில் இவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏன் நீங்கள் இந்த பொதுத் தேர்தலில் போட்டியிட வில்லை என்று ஊடக வியலாளரின் வினாவிற்கு பதிலளிக்கையிலேயே இவர் இந்த கருத்தினை தெரிவித்தார்.

இவர் இங்கு தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு

மட்டக்களப்பு மாவட்த்தில் 1956 க்குபிற்பாடு சிங்களவர்கள் குடியேற்ப்பட்டு 03 இனங்களும் சமமான எண்ணிக்கையில் வாழுகின்றனர். இதனால் நான் சிங்கள தேசியக் கட்சியுடன் இணைந்து மட்டக்களப்பில் போட்டியிட்டால் அது தமிழர்களின் இருப்புக்கு ஆபத்தாக மாறிவிடும்.

அது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் தலைவர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும். முஸ்லிம் தலைவர்கள் தெரிவு செய்யப்படுவதை நான் விரும்பவில்லை என கருணா தனது ஒரு மணி நேர நேர்காணலின் ஆரம்பத்தில் தெரிவித்துள்ளார்.

இக்கருத்து முஸ்லிம் சமுகத்தின் மீதான கருணாவின் பார்வையை வெளிக்காட்டியுள்ளது.

இக்கருத்தின் மூலம் கருணா வின் இனவாத முகமூடி கிழிந்து விட்டது. முஸ்லிம் தமிழ் உறவு தொடர்பில் அடிக்கடி பேசும் கருணாவின் உள்மனது முஸ்லிம் விரோதப்போக்கையே கொண்டுள்ளது இதன் மூலம் தெளிவாகின்றது.

இப்பேச்சு காத்தான்குடி- ஏறாவூர் படுகொலைகள் தொடர்பில் எமக்கு பல ஆதாரங்களை வெளிப்படுத்துகின்றது.

காத்தான்குடி ,ஏறாவூர் மற்றும் 600 முஸ்லிம் பொலிசாரின் படுகொலைகள் தொடர்பில் தனக்கு ஒரு தொடர்பும் இல்லை என்று கருணா நல்ல பிள்ளையாக நடித்தாலும் குறித்த இந்த நேர்காணலில் கருணா முஸ்லிம்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களின் மூலம் கருணாவின் முஸ்லிம் விரோதப் போக்கு மிகவும் தெட்டத் தெளிவாக விளங்குகின்றது

Post a Comment

0 Comments