அபு அலா -
தனி நபராலாயோ அல்லது தனி குழுக்களினாலோ ஜனநா யகத்ததை ஏற்படுத்த முடியாது “அட ம்பன் கொடியும் திரண்டால் மிடு க்கு” என்பதற்கு அமைவாக அனைவரி னதும் ஒத்துழைப்பின் காரணமாகவே இன்று உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்த முடிந்தது. என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் திணைக்களத்தின் 60 வரு டப் பூர்த்தியினையிட்டு நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா பத்ர் ஜூம் மா பள்ளிவாசலில் அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திலி ன விக்ரமரத்ன தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொ ண்டு உரையாற்றும் போதே அவர் இவ் வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தேர்தல் திணைக்களத்தின் 60 வது வருட பூர்த்தியினை தேசிய ரீதியி ல் கொண்டாடும் வகையில் நான்கு ந ிகழ்வுகளை ஏற்பாடு செய்து இந்த நிகழ்வுகள் அநுராதபுரம் மகாபோதியிலும், யா ழ்பாணம் மடு தேவாலயத்திலும், தி ருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலையத் திலும், அம்பாறை மாவட்டத்தில் ச ம்மாந்துறை ஹிஜ்றா பத்ர் ஜூம்மா பள்ளிவாசலிலும் ஏற்பாடு செய்து ள்ளோம்.
சம்மாந்துறையினை தெரிவு செய் வதற்கான காரணம் இந்த மாவட்டத்தி ல் கூடுதலான முஸ்லீம்கள் செரிந் து வாழ்வதனாலும் சம்மன்காரர் இங ்கு வந்து இறங்கிய இடம் என்பதனா லும், இந்த ஊரிலுள்ள மக்களிடத் தில் ஜனநாயக ரீதியான நிருவாக முறைமை பள்ளி பரிபாலனங்களில் காணப்படுவதனை அற ிந்தவன் என்பதனாலும் இந்த இடத்தையும், ஊரையும் தெரிவு செய்து இதனை நாத்த திட்டமிட்டோம்.
சகல மதத்தவர்களும் ஒட்டு மொத்தமாக எ திர்பார்ப்பது ஜனநாயம், இந்த ஜன நாயகத்தை எல்லாம் மதங்களும் வலியுறுத்துகின்றன. இந்த ஜனநாயகத்தைப்பற்றி இஸ்லாம் மதம் குர்ஆன், ஹதீஸ் மூலம் மிக ஆனித்தரமாக வலியுறுத்தி கூறியுள்ளது. அதனை நாம் தற்போது எமது நாட்டில் நிலைநிறுத்தியுள்ளோம் என்பதை எல ்லோரும் பெரும் மகிழ்சியுடன் ஏற்றுக் கொண்டுள் ளோம்.
தொடர்ச்சியாக நாம் ஜனநாயக வழிமு றைகளில் ஒற்றுமையாக அடம்பன் கொ டிபோல் செயற்படவேண்டும். நாம் ச ிங்கள மொழியில் கேட்டாலும், அரப ு மொழியில் கேட்டாலும், ஆங்கில மொழியில் கேட்டாலும், தமிழ் மொ ழியில் கேட்டாலும் கேட்கின்ற வி டயம் ஒன்றுதான் அதுதான் ஜனநா யகம் அது பாதுகாக்கப்பட வேண்டு ம்.
இஸ்லாமிய ஆட்சியின் கலிபாக்களான அபூபக்கர், உமர், உஸ்மான, அலி ஆகியோர்களின் காலங்களில் எவ்வாறு ஜகநாயக ரீதியில் ஆட்சியின் செயற்பாடுகள் அமைந்திருந்ததோ அதேபோன்று அவர்கள் செய்த அந்த ஆட்சியை நாம் மிகத் தெளிவாக விளங்கி இன மத வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழவேண்டும் எ்னறா ர்.
0 Comments