தனக்கு மற்றும் தங்கள் குடும்பத்திற்கு உருவாகியுள்ள நேரம், காலம் தொடர்பில் மிகவும் வருத்தமடைந்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று இரவு அநுராதபுரத்திற்கு சென்று, எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளமை தொடர்பில் சோதிடம் பார்த்துள்ளார் என தெரியவந்துள்ளது.
பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பினபில அநுராதபுர பிரதேசத்தில் பிரபல சோதிட பெண்னை பார்ப்பதற்கு கோத்தபாயவை அழைத்து சென்றுள்ளார்.
இப் பெண் ஸ்ரீ தலதா மாளிகையின் பஸ்நாயக்க நிலமே பிரதிப் திலங்க தெல பண்டார உறுதியாக வெற்றி பெறுவார் என இதற்கு சில தினங்களுக்கு முன்னாள் அறிவித்துள்ள நிலையில் நேற்றைய தினம் அவை சரியாக நடந்து விட்டதனால், கம்பன்பில கோத்தபாய ராஜபக்சவை நேற்றைய தினமே அவ்விடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
குறித்த சோதிடம் பார்க்கும் பெண் கோத்தபாய ராஜபக்சவிற்கு குறிப்பிட்டுள்ளதாவது,
வெளிநாடுகளுக்கு செல்ல தடை நீக்கப்பட்டிருந்தாலும் பல வருடங்களுக்கு வெளிநாடு செல்ல வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு இலங்கையினுள் எவ்வித பாதிப்பும் ஏற்படாதென உறுதியளித்துள்ளார்.
வழக்குகள் அனைத்து சில காலங்களில் நிறைவடைந்து விடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாளை அல்லது நாளை மறுதினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அவ் விடத்திற்கு அழைத்து வருவதாக கம்மன்பில குறித்த பெண்னிடம் குறிப்பிட்டுள்ளார்.
பிவிதுரு ஹெல உறுமயவின் அனுசரணையுடனே அனைவரும் அவ்விடத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றார்கள்.
0 Comments