Subscribe Us

header ads

புத்தளம் மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி கோரி சத்தியாக்கிரகம்

புத்தளம் மாவட்ட அரசியல்வாதியொருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கக் கோரி சத்தியாக்கிரகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிலாபம் காக்கபள்ளிபிரதான சந்தியில் நேற்று மாலை நடைபெற்ற இந்த சத்தியாக்கிரகத்தில் ஏராளமான பிக்குமாரும், பிரதேச அரசியல்வாதிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நடைபெற்ற பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிகொண்டிருந்தது. எனினும் கடந்த அமைச்சரவை நியமனத்தின்போது புத்தளத்தைச் சேர்ந்த எந்தவொரு அரசியல்வாதிக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களின் போது ஐக்கிய தேசியக் கட்சி மாவட்டத்தை வெற்றிகொண்டால் புத்தளத்துக்கு விசேட அனுசரணை வழங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் புத்தளம் மாவட்டத்தில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்ற பாலித ரங்கே பண்டாரவுக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என்றும் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட பிக்குமார் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments