பு/கற்பிட்டி அல்-ஹிரா ஆரம்ப பாடசாலையில் நிலவி வந்த வகுப்பறை கட்டிட நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக குவைத் நாட்டின் “RAHMA INTERNATINAL” உடாக மர்ஹூம் நசிர் அப்துல்லாஹ் அல் அக்காஷ் அவர்களது குடும்ப நிதியுதவியுடன் MERCY LANKA அமைப்பின் வேண்டுதலின் பயணாக இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பாடசாலையின் அதிபர் ஜனாப். அய்யூப் தலைமையில் இன்று 02.09.2015 புதன் கிழமை இடம் பெற்றது.
இந் நிகழ்வின் அதிதிகளாக “RAHMA INTERNATINAL” அமைப்பின் குவைத் நாட்டின் உறுப்பினர்களும், MERCY LANKA நிறுவன அதிகாரிகளும் வடமேல் மாகாணசபை உறுப்பினர் N.T.M தாஹிர், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் J.M தாரிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




















0 Comments