Subscribe Us

header ads

மனைவியின் குமுறல்கள்


கணவன் மனைவி வாழ்க்கையில் கட்டிலையும், கட்டியணைப்பதையும் தாண்டி எட்டிப்பார்க்க வேண்டிய எவ்வளோவோ விஷயங்கள் இருக்கின்றன. கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பது, மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது, குழந்தைகள் பெற்றோரிடம் எதுர்பார்ப்பது என இந்த எதிர்பார்ப்பு நீண்டுக் கொண்டே போகும்.

தங்களை இன்பமாக வைத்துக்கொள்ள, கணவன் எங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தாலே போதும் என்கிறார்கள் பெண்கள்.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எங்களை நீங்கள் புரிந்துக் கொண்டாலே போதும், நாங்கள் சந்தோசமாக தான் இருப்போம் வேறு எதுவும் வேண்டாம் என்கிறார்கள் தாய்க்குலங்கள். 

புரிதல் தான் உறவின் அஸ்திவாரம் என்கிறார்கள், உண்மை தான்.

நீங்கள் வேலைக் காரணமாகவோ, நட்பு வட்டாரத்தின் வற்புறுத்துதலின் காரணமாகவோ எவ்வளவு தொலைவில் இருந்தாலும், எங்களோடு உணர்வால் இணைந்திருங்கள். வீட்டை விட்டு வெளியில் சென்றதும், வீடோடு சேர்ந்து எங்களையும் மறந்துவிட வேண்டாம். 

சிறிது நேரம் அலைப்பேசியில் அழைத்தாவது பேசுங்கள் என்று தங்களது குமுறல்களை கொட்டுகின்றனர் பெண்கள்.

ஆண்கள் மனைவி செய்யும் சிறு தவறுகளை கூட குத்திக் காட்டி பேசுவார்கள். ஆனால் அவர்கள் செய்யும் பெரிய தவறுகளை மனைவி கண்டுகொள்ளக்கூடாது என்று நினைப்பார்கள். குத்திக் காட்ட வேண்டாம் என்கிறார்கள் பெண்கள். 

கணவனாக மட்டுமின்றி நல்ல தோழனாக இருந்து தோள் கொடுங்கள் என்கிறார்கள்

ஒவ்வொரு ஆண்மகனின் கடமை இது, அம்மா, சகோதரி, தோழி, மனைவி, மகள் என அனைவரையும் பாதுகாக்க வேண்டியது. ஆண்களிடம் இருந்து பெண்களை ஆண்களே பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். பெண்கள் தனது கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது, நம்புவது அவளுக்கனா முழு பாதுகாப்பு தான்.

Post a Comment

0 Comments