Subscribe Us

header ads

வட மேல் மாகாண முதலமைச்சர் பதவி, ஜனாதிபதியின் தீர்மானம்?


வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு பாரிய போட்டி காணப்படுவதாக எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதலமைச்சர் பதவி குருணாகலைக்கு கிடைக்க வேண்டும் என சபையின் தற்போதைய தலைவர் தர்மசிறி தசநாயக்க தெரிவித்துள்ளார். இடைவெளியை ஏற்படுத்திய முதலமைச்சரும் குருணாகலையைச் சேர்ந்தவர் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இதுவரையில் முதலமைச்சர் பதவி புத்தளம் மாவட்டத்துக்கு வழங்கப்படாதுள்ளதனால், முதலமைச்சர் பதவி புத்தளம் பிரதேசத்துக்குரியதாக வேண்டும் என வட மேல் மாகாண சபை அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை முதலமைச்சர் பதவி வழங்கப்படாதுள்ள மாவட்டத்துக்கு வழங்குவதற்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் எதிர்பார்ப்பும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment

0 Comments