தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்துள்ள தனக்கு மூன்று விதமான எதிர்பார்ப்புக்கள் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள பொதுமக்களின் இடங்களை மீளளிப்பது, காணாமல் போயுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துதல், இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றல் என்பனவற்றையே இந்த அரசாங்கத்திடம் தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் இந்திய ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மைத்திரிபால சிறிசேனவுடன் “வைபர் அப்” முறைமையினூடாகவே தொடர்பு கொண்டேன். இதனை பதிவு செய்வதற்கு கடந்த அரசாங்கத்துக்கு முடியாமல் போனது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவாகியிருந்தால், தான் உட்பட பலர் கொலை செய்யப்படவிருந்ததாகவும் அவர் மேலும் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.
0 Comments