எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு வழங்கியமை மகிழ்ச்சி அளிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒன்றாக இணைந்து எடுத்த இந்த தீர்மானம் நாட் டின் ஜனநாயகத்தின் எதிர்கால பயணத்துக்கு சிறந்ததொரு ஆரம்பமாகும். சபாநாயகர் உறுதியாக இருந்து இந்த தீர்மான த்தை எடுத்ததையிட்டு அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தங்களுக்கு கிடைத்துள்ள இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை நாட்டின் நன்மைக்கான தீர்மானங்களை எடுப்பதற்கு உபயோகிக்க வேண்டும்.மாறாக நாட்டை பிரிப்பதற்கு மற்றும் இலங்கை தொடர்பில் பிழையான எண்ணத்தை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வதற்கு பிரயோகிக்கக் கூடாது.
அவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை நாட்டுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் பிரயோகித்தால் அந்த சதித்திட்டத்தை பாராளுமன்றத்தில் தோற்கடிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
0 Comments