Subscribe Us

header ads

ஜனநாயகத்தின் பயணத்திற்கு சிறந்ததொரு ஆரம்பம் : சோம­வங்ச பாராட்டு

எதிர்­க்கட்சி தலைவர் பத­வியை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்­த­னுக்கு வழங்­கி­யமை மகிழ்ச்சி அளிக்­கின்­றது என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் தலைவர் சோம­வங்ச அம­ர­சிங்க தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில்,





ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஒன்­றாக இணைந்து எடுத்த இந்த தீர்­மானம் நாட் டின் ஜன­நா­ய­கத்தின் எதிர்­கால பய­ணத்­துக்கு சிறந்­த­தொரு ஆரம்­ப­மாகும். சபாநா­யகர் உறு­தி­யாக இருந்து இந்த தீர்­மா­ன த்தை எடுத்­த­தை­யிட்டு அவ­ருக்கு எனது நன்­றி­களை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.



அத்­துடன் தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பு தங்­க­ளுக்கு கிடைத்­துள்ள இந்த எதிர்க்­கட்சி தலைவர் பத­வியை நாட்டின் நன்­மைக்­கான தீர்­மா­னங்­களை எடுப்­ப­தற்கு உப­யோ­கிக்க வேண்டும்.மாறாக நாட்டை பிரிப்­ப­தற்கு மற்றும் இலங்கை தொடர்பில் பிழை­யான எண்­ணத்தை சர்­வ­தே­சத்­துக்கு கொண்டு செல்­வ­தற்கு பிர­யோ­கிக்கக் கூடாது.



அவ்­வாறு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இந்த எதிர்க்­கட்சி தலைவர் பத­வியை நாட்­டுக்கு தீங்கு ஏற்­ப­டுத்தும் வகையில் பிர­யோ­கித்தால் அந்த சதித்­திட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் தோற்கடிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments