Subscribe Us

header ads

இதை அவதானித்தீர்களா? அமைச்சரவை பதவியேற்பின்போது சில சுவாரஷ்ய சம்பவங்கள்

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்­றைய தினம் நடை­பெற்ற புதிய தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை நிய­மனம் வழங்கும் நிகழ் வில் மிகவும் சுவா­ரஷ்­ய­மான சம்­ப­வங்­களை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று நண்­பகல் 12 மணிக்கு அமைச்­ச­ரவை நிய­மனம் வைபவ ரீதி­யாக ஆரம்­பிக்­கப்­பட்­டது. இதன்­போது ஆரம்­பத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அவ­ரது பாரியார் மைத்­திரி விக்­கி­ர­ம­சிங்­கவும் அவைக்கு வருகை தந்­தனர். இதன்­போது கட்சி பேதங்கள் பாராமல் அனை­வரும் எழுந்து நின்று மரி­யாதை செய்­தனர்.
இதன்­பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வருகை தந்­த­வுடன் முழு சபையும் எழுந்து நின்­றது. அத­னை­ய­டுத்து தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது.
இந்த நிகழ்வு ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 11 மணிக்கே வருகை தந்­தி­ருந்­தனர். இதன்­போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரும் தேர்தல் கால வாக்­கு­வா­தங்­களை மறந்­து­விட்டு மிகவும் நகைச்­சு­வை­யான முறையில் கலந்­து­ரை­யாடிக் கொண்­டி­ருந்­தனர். எஸ்.பி திஸா­ நா­யக்க, ஜோன் அம­ர­துங்க, சுசில் பிரே­ம­ஜ­யந்த, ரவி கரு­ணா
நா­யக்க, ராஜித்த சேனா­ராத்ன ஆகியோர் கலந்­து­ரை­யா­டிக்­கொண்­டி­ருந்­தனர்.
அதே­போன்று லக் ஷ்மன் கிரி­யெல்ல, அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா, சுசில் பிரே­ம்ஜ­யந்த ஆகி­யோரும் நீண்ட நேரம் பேசி கொண்­டி­ருந்­தனர்.
மேலும் அமைச்­ச­ரவை பத­வி­யேற்பு நிகழ்­வுக்கு அமைச்­சர்கள் தனது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுடன் வருகை தந்­தி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்­தது. அமைச்­சர்கள் அமர்ந்­தி­ருந்த கதி­ரைக்கு பின் பகு­தியில் அவர்­க­ளது பாரி­யார்கள் அமர்ந்­தி­ருந்­தனர்.
இந்­நி­லையில் அமைச்­ச­ரவை நிய­ம­னங்கள் வழங்­கு­வதற்­கான நேரம் ஆரம்­பமா­னது. இதன்­போது வருகை தந்த அமைச்சர் எஸ்.பி திஸா­நா­யக்க சத்­தி­ய­ப்பி­ர­மாணம் செய்து விட்டு கையொப்­ப­மி­டு­வ­தற்கு பேனா வை தேடிக்­கொண்­டி­ருந்தார். இறு­தியில் அவர் தனது பைக்குள் கைவிட்டு பார்த்­து­விட்டு சற்று நேரத்­துக்குள் பேனாவை கண்­டு­பி­டித்து கையொப்­ப­மிட்டார்.
இதே­வேளை,ஜோன் அம­ர­துங்க சத்­தி­யப் ­பி­ர­மாண கடி­தத்தை வாசிப்­ப­தற்கு முன்னர் கையொப்­ப­மிட்டு விட்டு பின்னர் வாசிக்­கா­ம­லேயே ஜனா­தி­ப­தி­யிடம் கோவையை ஒப்­ப­டைக்க முனைந்த போது ஜனா­தி­பதி செய­லாளர் உடனே சத்­தி­ய­ப் பி­ர­மாண கடி­தத்தை வாசிக்­கு­மாறு கூறினார். அதன்­பின்னர் அமைச்சர் சத்­தி­ய­ப் பி­ர­மா­ணத்தை வாசித்தார்.
அதே­போன்று முன்­னைய பாரா­ளு­மன்­றத்தின் பிரதி சபா­நா­ய­கரும் புதிய அமைச்­ச­ர­வையின் பெற்­றோ­லிய துறை அமைச்­ச­ரான சந்­திம வீர­க்கொடி சத்­தியப் பிர­மாண கடிதத்தை வாசித்­த­பின்னர் கையொப்பம் இடாமல் ஜனா­தி­பதியிடம் கைய­ளிக்க முற்­பட்­ட­போது சிறிது நேரம் சிந்­தித்து அதன்­பி­றகே தான் கையொப்­ப­மி­ட­வில்லை என்­ப­தனை அறிந்து அதன்­பின்னர் கதி­ரையில் அமர்ந்து கையொப்­ப­மிட்டார். இதன்­போது முழு அவை­யுமே சிரிப்பு சத்­தத்­துடன் காணப்­பட்­டது.
அதே­போன்று அமைச்­ச­ரவை நிகழ்­விற்கு மூன்று அமைச்­சர்கள் நேரம் கடந்து வந்­தனர். நேற்று வெ ள்ளிக்­கி­ழமை என்­ப­தனால் முஸ்லிம் அமைச்­சர்கள் பள்­ளி­வா­ச­லுக்கு சென்று வந்­த­மை­யினால் ஜனா­தி­பதி உரை­நி­கழ்த்­தி­யதன் பின்­னரே அமைச்சு பத­வி­களை பெற்றுக் கொண்­டனர்.
அதே­போன்று பிரதமர் உரைநிகழ்த்தியதன் பின்னர் மேடையிலிருந்து கீழே வரும் போது படியிலிருந்து கால் சரிந்து கீழே விழுந்துவிடும் நிலைக்கு சென்றார். எனினும் அருகில் இருந்தோர் அவரை கைப்பிடித்தனர்.
இறுதியான நிகழ்வு நிறைவடைந்த பின்னர் கட்சி பேதங்கள் பாராமல் இரண்டு கட்சியினரும் கைலாகு கொடுத்து ஒருவருடன் ஒருவர் கருத்து பரிமாறிக்கொண்டனர்.

Post a Comment

0 Comments