Subscribe Us

header ads

2020 ஆம் ஆண்­ட­ளவில் புற்றுநோயினால் மர­ணிப்­ப­வர்­களின் எண்­ணிக்­கையே அதி­க­மா­க­வி­ருக்கும்


இலங்­கையில் தற்­போது இரு­தய நோய் கார­ண­மாக மர­ணிப்­ப­வர்­களின் எண்­ணிக்­கையே அதி­க­மாக இருக்­கி­றது. ஆனால் 2020 ஆம் ஆண்­ட­ளவில் இந்­நிலை மாறி புற்­று­நோ­யினால் மர­ணிப்­ப­வர்­களின் எண்­ணிக்­கையே அதி­க­மாக இருக்கும் என மஹ­ர­கம புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் டாக்டர் ஜி.விஜே­சூ­ரிய தெரி­வித்தார்.

கதீஜா நம்­பிக்கை நிதியம் மஹ­ர­கம புற்று நோய் வைத்­தி­ய­சா­லைக்கு சுமார் 200 மில்­லியன் (20 கோடி) ரூபா பெறு­ம­தி­யான நவீன பெட் சீ.ரி.ஸ்கேன் இயந்­தி­ர­மொன்­றினை நன்­கொ­டை­யாக வழங்­கு­வ­தற்­கான திட்­ட­மொன்­றினை வகுத்­துள்­ளது.

இந்த ஸ்கேன் இயந்­தி­ரத்தை கொள்­வ­னவு செய்­வ­தற்­கான நிதி­யு­த­விகள் பொலிஸ் திணைக்­களம்,ஸ்ரீலங்கா விமான சேவை நிறு­வனம் உட்­பட பல பொது நிறு­வ­னங்­களின் ஊடாக பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

இது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கொழும்­பி­லுள்ள உபாலி நவ­லோக்க ஹோட்­ட­லில்­க­தீஜா நம்­பிக்கை நிதி­யத்தின் தலைவர் எம்.எஸ்.எச்.முஹம்மத் தலை­மையில் நடை­பெற்­றது.நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்து அவர் கூறு­கையில்,

இலங்­கையில் தற்­போது இரு­தய நோய் கார­ண­மாக மர­ணிப்­ப­வர்­களின் எண்­ணிக்­கையே அதி­க­மாக இருக்­கி­றது. ஆனால் 2020 ஆம் ஆண்­ட­ளவில் இந்­நிலை மாறி புற்­று­நோ­யினால் மர­ணிப்­ப­வர்­களின் எண்­ணிக்­கையே அதி­க­மாக இருக்கும். ஏனென்றால் புற்று நோய் மர­ணங்கள் படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து வரு­கின்­றன.

இலங்­கையில் வரு­டாந்தம் 13500 பேர் புற்று நோய்க்கு உள்­ளாகி வரு­கி­றார்கள். பெண்கள் அதி­க­மானோர் மார்­பகப் புற்று நோய்க்கே ஆளா­கி­றார்கள். புற்று நோய்க்கு ஆளாகும் பெண்­களில் 25 வீத­மானோர் மார்­பகப் புற்று நோய்க்கு உள்­ளா­ன­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். மார்­பகப் புற்று நோய் வயது வந்­தோர்­க­ளுக்கே ஏற்­ப­டு­கி­றது. என்­றாலும் அண்­மையில் 25 வய­துள்ள திரு­ம­ண­மா­காத பெண் ஒருவர் மார்­பகப் புற்று நோய்க்­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லைக்கு வந்தார்.

அதே­போன்று ஆண்­களில் அதி­க­மானோர் முகப் புற்று நோய்க்­குள்­ளா­கி­றார்கள். முகம் என்று கூறும் போது வாய், தொண்டை காது­களில் ஏற்­ப­டு­கி­றது. வெற்­றிலை, மது­பான பாவனை, புகைத்தல் மற்றும் போஷாக்­கற்ற உணவு கார­ண­மா­கவே புற்­றுநோய் ஏற்­ப­டு­கி­றது. முகச்­சுத்­தத்தை சரி­யாக பேணாமல் இருக்­கின்­ற­மையும் புற்றுநோய் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மா­கி­றது.

புற்றுநோய்­க­ளுக்­கான சிகிச்­சை­க­ளுக்­கான செல­வுகள் மிகவும் அதி­க­மாகும். சாதா­ரண மக்­களால் இந்த செல­வு­களை ஏற்க முடி­யாது. தனியார் வைத்­தி­ய­சா­லைகள் சிகிச்­சை­க­ளுக்­கென்றும் ஸ்கேன், வைத்­தி­யர்­களின் கட்­ட­ண­மென்றும் மில்­லியன் கணக்­கான ரூபாக்­களை அற­வி­டு­கின்­றன.

மார்­பக புற்று நோயை ஊசி­யேற்­று­வதன் மூலம் சுக­மாக்க வேண்­டு­மாயின் குறைந்­தது 17 ஊசிகள் ஏற்ற வேண்டும் ஒரு ஊசியின் விலை 2 இலட்­சத்து 30 ஆயிரம் ரூபா­வாகும். பரி­சோ­த­னை­க­ளுக்கு 3 இலட்சம் ரூபா அற­வி­டப்­ப­டு­கி­றது. சத்­திர சிகிச்­சைக்கு 8 இலட்சம் ரூபா அற­வி­டப்­ப­டு­கி­றது. இவ்­வாறு தனியார் வைத்­தி­ய­சா­லைகள் பெரு­ம­ளவு பணத்­தினை அறி­வி­டு­கின்­றன.

அதனால் அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­களில் புற்று நோய்க்­குள்­ளா­ன­வர்கள் விரைவில் முறை­யான சிகிச்சை பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மா­யி­ருந்தால் அதற்­கான வச­திகள் அங்கு இருக்க வேண்டும். அந்த வகையில் கதீஜா நம்­பிக்கை நிதியம் 20 கோடி ரூபா செல­வி­லான பெட் சீ.ரி.ஸ்கேன் இயந்­தி­ரத்தை அன்­ப­ளிப்புச் செய்­வ­தற்­கான ஆரம்ப நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது.

சுகா­தார அமைச்சு இதற்­கான அனு­மதி வழங்­கி­யி­ருக்­கி­றது. இதற்­கென மஹ­ர­கம புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையின் பெயரில் தனி­யான வங்கிக் கணக்கு ஆரம்­பிக்­கப்­படும் என்றார்.

நிகழ்வில் மஹ­ர­கம புற்­றுநோய் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல், டிமோ மோட்டார் கம்பனியின் தலைவர் ரஞ்சித் பண்டிககே, கதீஜா நம்பிக்கை நிதியத்தின் தலைவர் எம்.எஸ்.எச்.முஹம்மத் உட்பட கதீஜா நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்கள், வங்கிகளின் உயரதிகாரிகள், புத்திஜீவிகள், ஹஜ், உம்ரா முகவர் நிலையங்களின் உரிமையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments