கம்பஹா – திவுலப்பிட்டிய – கொட்டதெனியாவ பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.
5 வயதான குறித்த சிறுமியின் சடலம் பிரேதபரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை சிறுமியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்தநிலையில், மரணித்த சிறுமியின் பிரேத பரிசோதனையின்போது அவர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டமையும் அத்துடன் அவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments