தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 38 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
யோசனைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆதரவளித்த அனைவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது.
பதவி வழங்கப்படாதவர்களுக்கு நாடாளுமன்ற மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களில் பதவிகள் வழங்கப்படும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் வெற்றியீட்டப்பட்ட பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைமைப் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆதரவாக வாக்களித்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments