Subscribe Us

header ads

மெஸ்பரோ அமைப்பின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

அபு அலா – 


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ் கடமையை தொடர்ந்தும் முஸ்லிம்கள் ‘ஈதுல் அழ்ஹா எனப்படும் தியாகத் திருநாளை கொண்டாடும் வேளையில்உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் எதிர்நோக்கப்படும் சவால்களுக்கு துணிச்சலோடு முகம் கொடுத்து அவற்றை முறியடித்து வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுவோமாக என இலங்கை முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் அரசியல் ஆய்வு மையம் (மெஸ்பரோ) அமைப்பின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தமது ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மெஸ்பரோ அமைப்பின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் விடுத்துள்ள தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இவ்வாண்டும் வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் மத்தியில் இந்த ‘துல் அழ்ஹா’ பெருநாளை முஸ்லிம்கள் சந்திக்கின்றனர்இத்தகைய ந்தர்ப்பத்தில்நபி இப்ராஹிம் (அலை), இஸ்மாயில் (அலைஆகியோரின் அளப்பரிய தியாகத்தை நினைவு ூரும் இவ்வேளையில் முஸ்லிம்கள் தங்களது தியாக உணர்வையும்ஈமானிய உணர்வையும் மேலும் மெருகூட்டிக்கொள்கிறார்கள்.
இவ்வாறான எல்லாவிதமான துன்ப துயரங்களிலிருந்து விடுபட்டு இம்மை, மறுமை இரண்டிலும் விமோசனமடை எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக என்று இலங்கை முஸ்லிம்களின் சமூக, கல்வி மற்றும் அரசியல் ஆய்வு மையம் (மெஸ்பரோ) அமைப்பின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் விடுத்துள்ள ஈதுல் அழ்ஹா’ வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments