Subscribe Us

header ads

2018ம் ஆண்டு முதல் இலங்கையின் முதலாவது மின்சார ரயில் சேவை! (VIDEO)


இந் நாட்டில் முதலாவது மின்சார ரயில் சேவை ஆரம்பித்தல் மற்றும் ரயில் பாதையை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மலேசியா நிறுவனம் ஒன்று அண்மையில் கைச்சாத்திட்டது.

அதற்கமைய கொழும்பு கோட்டையில் இருந்து நீர்கொழும்பு வரை இந்நாட்டின் முதலாவது மின்சார ரயில் பாதை வலையமைப்பு நிர்மானிக்கப்படவுள்ளது.

இதற்கு இணையான 150 ஏக்கர் அளவிலான காணி ஒன்றினை விலைக்கு பெற்றுகொண்டு அனைத்து வசதிகளும் கொண்டு நகரம் ஒன்றினை நிர்மானிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்தி திட்டத்திற்கு சாத்தியத் தன்மையான அறிக்கை தயாரிப்பதற்கு 5 மில்லியன் டொலர் பணம் முதலீடு செய்யவுள்ள நிலையில் குறித்த அறிக்கைகான அனுமதி அரசாங்கத்தில் கிடைத்த பின்னர் இத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கமை நீர்கொழும்பில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான மின்சார ரயில் பாதையின் தூரம் 42 கிலோ மீற்றராகும்.

2018ஆம் ஆண்டு நிறைவடையும் போது இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments