Subscribe Us

header ads

மு.கா.ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரஃப் இன் 15ஆவது நினைவு தினம் இன்று

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், அமைச்சருமான மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரஃப் இன் 15ஆவது ஞாபகார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் முடிசூடா மன்னனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காவிய நாயகனுமான மொஹமட் ஹூசைன் முஹமட் அஷ்ரஃப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகர்த்தாவான காத்தான்குடியைச் சேர்ந்த அகமத் லெப்பையுடன் கூட்டாக செப்டெம்பர் 1981 இல் கட்சியை நிறுவினார். என்றாலும் 1986 இல் கட்சியின் தலைமைத்துவத்தை உரிய வகையில் பொறுப்பேற்ற பின்னர், எம்.எச்.எம். அஷ்ரஃப் முஸ்லிம் காங்கிரஸிற்கு புதிய தொலைநோக்கையும், புதிய பாதையையும் கொடுத்தார்.
15 வருடங்களாக அஷ்ரப் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் அவரின் இலட்சிய வீறும், சாதிக்கும் ஆற்றலும் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்பல சாதனைகளைக் கண்டது.
வாழ்வின் உச்சக் கட்டத்தில், இலங்கையின் அரசியல் வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த இவர் மர்மமான ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்.
2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பகுதியில் உரக்கந்த மலைத்தொடர்மேல் இலங்கை விமானப்படையின் எம்.ஐ- 17 ரக ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளாகியதில் எம். எச். எம். அஷ்ரஃப் தனது 51ஆவது வயதில் மரணமானார்.
இவருடன், விமான ஊழியர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தனிப்பட்ட ஊழியர்கள், அரசியல் ஆதரவாளர்கள் என 14 பேர் கொல்லப்பட்டனர். 

Post a Comment

0 Comments