நேபாள நாட்டை இந்து நாடாக அறிவிக்கும் திட்டத்தை, அந்த நாட்டு பாராளுமன்றம் நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளம், உலகில் ஒரு இந்து நாடாக விளங்கியது, அங்கு 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் பிரசாரத்தால், 2007ஆம் ஆண்டு அந்த நாடு மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேபாளத்தின் புதிய அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில், நேற்றைய தினம் நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கும் பிரேரணையை நேபாள தேசிய ஜனநாயக கட்சி கொண்டுவந்தது.
எனினும், பெரும்பான்மையான உறுப்பினர்கள், இதற்கு எதிராக வாக்களித்த நிலையில் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது. குறித்த தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், இந்து மத ஆதரவாளர்கள் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முற்பட்டதால், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
0 Comments