Subscribe Us

header ads

சிறுமி படுகொலை தொடர்பில் மூவர் மீது விசேட அவதானம்


படு­கொலை செய்­யப்­பட்ட கொட்­ட­தெ­னி­யாவ - படல்­கம, அக்­க­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற சிறு­மியின் இறுதிக் கிரி­யைகள் நேற்று இடம்­பெற்­றன. இன்­றைய தினம் சேயா செதவ்மி தனது 5 ஆவது பிறந்த தினத் தைக் கொண்­டாட இருந்த நிலை­யி­லேயே நேற்று மாலை அவ­ரது இறுதிக் கிரி­யைகள் இடம்­பெற்­றன.
இந்த நிலையில் சிறுமி சேயா செதவ்­மியின் படு­கொலை விசா­ர­ணை­களில் எவரும் நேற்று மாலை வரை கைது செய்­யப்­ப­டாத போதும் மூவர் குறித்து விசேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.
எவ்­வா­றா­யினும் இன்று அல்­லது நாளைக்குள் இடம்­பெறும் சில முக்­கி­ய­மான விஷேட சோத­னைகள் மற்றும் அறி­வியல் பெள­தீ­க­வியல் சான்­று­களை முன்­னி­றுத்­திய விசா­ர­ணை­களில் சந்­தேக நபரை அல்­லது நபர்­களை உறு­தி­யாக அடை­யாளம் காணக் கூடி­ய­தாக இருக்கும் என தாம் நம்­பு­வ­தா­கவும் அந்த பொலிஸ் அதி­காரி மேலும் தெரி­வித்தார்.
இத­னி­டையே இந்த விவ­காரம் குறித்த சட்ட நடவ­டிக்­கைகள் மற்றும் விசா­ர­ணை­க­ளுக்கு டீ.என்.ஏ.மூலக்­கூ­றுகள் மற்றும் அறி­வியல் ரீதி­யி­லான தடயங்­களை பயன்­ப­டுத்த பொலிஸார் தீர்­மா­னித்­துள்­ள­மைக்­க­மைய அந் நடவ­டிக்­கை­களும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. நேற்று மாலை 5.00 மணி வரையில் இந்த விவ­காரம் குறித்து சிறு­மியின் தாய் மற்றும் தந்தை, பாட்டன் , பாட்டி உள்­ளிட்ட 20 இற்கும் அதி­க­மா­னோரின் வாக்கு மூலங்­களை பொலிஸார் பதிவு செய்­தி­ருந்­தனர்.
கொட்டதெனியாவப் பிர­தே­சத்தில் உளவுப் பிரிவு உத்­தி­யோ­கத்­தர்களை கட­மையில் ஈடு­ப­டுத்தி இந்த படு­கொலை மற்றும் அத­னுடன் தொடர்­பு­டைய பல தக­வல்­க­ளையும் சேக­ரித்­துள்­ளனர். அதன்­படி மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெறும் நிலையில் விரைவில் சந்­தேக நபர்கள் கைதாவர் என எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
இந் நிலையில் இவை தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கொட்­ட­தெ­னி­யாவ பொலிஸ் நிலை­யத்­துக்கு மேல­தி­க­மாக திவு­ல­பிட்­டிய மற்றும் கந்­தானை ஆகிய பொலிஸ் நிலைய அதி­கா­ரிகள் அந்த குழுக்­களில் அங்கம் வகிப்­ப­தா­கவும் பொலிஸ் தல­மை­ய­கத்தின் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.
அத்துடன் ஒட்டு மொத்த விசா­ர­ணை­கள் நீர்­கொ­ழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சரின் கட்­டுப்­பாட்டில் இடம்­பெ­று­வ­தா­கவும் அவர் குறிப்பிட்டார்.

கொட்­ட­தெ­னி­யாவ படல்­கம அக்­க­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி கடந்த சனிக்­கி­ழமை அதி­காலை காணா­மற்­போ­யி­ருந்தார். அதன்­பின்னர் மறு நாள் அவர் வீட்­டி­லி­ருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள ஓடை­யொன்றின் அருகில் இருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்டார்.
இது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் நேரடி கட்டுப்பாட்டில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, மேல் மாகாணத்தின் வடக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எல்.ஜி.குலரத்ன ஆகியோரின் கட்டுப்பாட்டில் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அபேவிக்ரமவின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments