உங்களது சம பருவத்தினரை எப்படி நடத்துகிறீர்கள்? மரியாதையாக, கொஞ்சம் யோசித்து, சிலரை சரிசமமாக நடத்தும் அதேவேளையில், இளைய தலைமுறையை பார்த்து சில நேரங்களில் நமது நடவடிக்கைகளை நாம் சரிசெய்துகொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் கேன்சஸ் நகரில் உள்ள தனியார் கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் புதிய மாணவர்களை வரவேற்று அவர்களுக்கு தமது அக அழகைப் பற்றிய தவறான எண்ணங்களை போக்கி, தன்னைத் தானே ஏற்கும் விதமாக அப்பள்ளியின் மூத்த மாணவர்கள் ஒரு சிறப்பான விஷயத்தை செய்துள்ளனர்.
பதின் பருவத்தில் உள்ளவர்கள் பல்வேறு தவறான சிந்தனைகளுக்கும், பாதைகளுக்கும் சுலபமாக தள்ளப்பட்டுவிடலாம். நமது முகத்தில் ஏற்பட்ட சின்ன தழும்புகூட இந்தச் சிந்தனையைத் தூண்டி, தன்னம்பிக்கை இழந்துபோக வைக்கலாம்.
இந்த வயதில் ஏற்படும் பொல்லாத எண்ணங்களை பின் தள்ளவும், தம்மையே ஏற்றுக்கொண்டு நல்வழியில் நடக்கும் நோக்கத்தோடும் பைபிளில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் அக அழகு பற்றி சொல்லப்படும் பல்வேறு கருத்துக்களை பள்ளியின் கழிவறை கண்ணாடிகளில் எழுதி வைத்துள்ளனர்.
‘உன் பிம்பத்தை மட்டுமே கண்ணாடி காண்பிக்கும்: உன்னை யாரென்று அல்ல!’ இது அதில் உள்ள நூறில் ஒரு கருத்து.. இதுபோன்ற இளைஞர்களே நாளைய சமுதாயமாக உருவெடுக்கப்போகின்றனர் என்பது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.
0 Comments