Subscribe Us

header ads

அனைத்து பிரதேசங்களிலும் சமமான அபிவிருத்தி வேலைகளை எவ்வித பாரபட்சமின்றி மேற்கொள்வேன் - ஹரீஸ் MP

அபு அலா –


அம்பாறை மாவட்டத்தின் அரசியல் திகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கைவசம் கிடைத்துள்ளதுஇதனை பயன்படுத்தி எமது மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் சமமான அபிவிருத்தி வேலைகளை எவ்வித பாரபட்சமின்றி மேற்கொள்வேன் என்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றிபெற்று பாராளுமன்ற றுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வெற்றிக்கு வாக்களித்த வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்றிரவு (27) இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.நைஸர் தலைமை இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தேர்தலில் எனது வெற்றிக்கு வாக்களித்த வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச கட்சிப் போராளிகளுக்கும்மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத்தேர்தலில் மக்கள் வழங்கிய இந்த அமானிதமான ஆணையினை கொண்டு இப்பிரதேச மக்களின் அபிவிருத்திஅபிலாஷைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்  என்றார்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.ஆசிக்யூ.எல்.சுலைமாலெவ்வை உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் ாங்கிரஸின் வரிப்பத்தான்சேனை மத்திய குழு உறுப்பினர்கள்இளைஞர்கள்போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments