ஆண்கள் வழி தெரியாமல் உள்ளுக்குள் தவித்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் எப்படியாவது இடத்திற்கு சென்றடைவோம் என்ற நம்பிக்கையில் தவறான பாதையில் மாதத்திற்கு ஒன்றரை மைலாவது செல்கின்றனர் என இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி சுமார் 1000 பேரிடம், அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகம் மூலமாக நிகழ்த்தப்பட்டது. அதில், ஆண்கள் பொதுவாக வழி கேட்டால் ஆண்மைக்கே இழுக்கு என்ற எண்ண ஓட்டத்தால், தெரியாத இடங்களிலும் தங்களது மனம்போன போக்கில் செல்கின்றனர். ஆண்கள் தங்களை பெண்களை விட எல்லா விதத்திலும் சிறந்தவர் என நம்புவதாலேயே இவ்வாறு நிகழ்ந்து வருகிறது.
இந்த புரிதலுக்கு மாறாக பெண்கள்தான் சரியாக அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை சென்றடைவதாகவும் தெரிய வந்துள்ளது. வழி தெரியவில்லை என வழிப்போக்கர்களிடம் கேட்டு அவர்கள் சென்றடைகின்றனர்.
இவ்வாறு தவறான பாதையில் கடந்த 50 ஆண்டுகளாக சென்ற ஆண்கள் சுமார் 900 மைல் தூரத்தை வழி தெரியாததாலேயே கடந்திருக்கலாம் என்று இந்த ஆய்வை நடத்தியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தெரியாத ஊரில் வழி கேட்பதில் தவறில்லைதானே!
0 Comments