Subscribe Us

header ads

காரம் உயிரைக் குடிக்கும் நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறதா?



ஆந்திராக்காரர்களின் கார உணவுகள் உண்ணும் பழக்கம் பார்ப்பவருக்கு பயம் தந்தாலும், அது உயிரைக் குடிக்கும் சில நோய்களிலிருந்து நம்மைக் காக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளிலிருந்து கார உணவுகள் காப்பதாக ஆய்வு முடிவு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மிளகாயில் இருக்கும் கேப்சைசின் என்ற மூலப்பொருள் நடுத்தர வயதில் ஏற்படும் மரணத்தை தடுக்கவல்லது என்று இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

சீனாவில் சுமார் 5 லட்சம் பேரிடம் 7 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம், இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது காரம் செறிந்த உணவை உண்பவர்களின் நீண்ட ஆயுளுக்கு அந்த உணவு வகை உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் காரம் விருப்பமான ருசியல்ல. ஆனால், இந்த ஆராய்ச்சி முடிவு அங்கே அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள புற்றுநோய், உடல் பருமன் போன்றவற்றிலிருந்து விடுபடக் காரணமாக இருப்பதால் அவர்களின் உணவுப் பழக்கம் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments