மஹிந்த ராஜபக்சவின் சோதிடக் கணிப்பின் படி பார்த்தாலும் அவரது அதிர்ஷ்டம் நீங்கி விட்டதாக தெரிவித்துள்ள மேர்வின் சில்வா நாளை விடியும் போது ரணில் பிரதமர் என்பதை நாடு அறிந்து கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தற்போது கலந்து கொண்டு தேர்தல் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர் மேலும் தெரிவிக்கையில் தனது அரசியல் வாழ்க்கை முடிந்த பின்னரே தன் மகன் அரசியலுக்கு வருவார் எனவும் குடும்ப அரசியல், பணப் பேராசை தமக்கில்லையெனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments