Subscribe Us

header ads

"பிர­தமர் கனவு கலைந்­தது தோல்­வியை ஏற்­கிறேன்''


நாட்டின் அடுத்த பிர­த­ம­ராகும் எனது கனவு கலைந்­து­விட்­டது. தோல்­வியை ஏற்­றுக்­கொள்­கின் றேன் என்று தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிட்­ட­வரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.
நடந்து முடிந்த எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தோல்­வியை தழு­விய பின்னர் சர்­வ­தேச ஊடகம் ஒன்­றுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மேலும் குறிப்­பி­டு­கையில்,
"நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஏற்­பட்ட தோல்­வியை ஏற்­றுக்­கொள்­கின்றேன். நாட்டின் அடுத்த பிர­த­ம­ராகும் எனது கனவு கலைந்­து­விட்­டது. அதனை ஏற்­றுக்­கொள்­கின்றேன். ஆனால் எதிர்க்­கட்சி உறுப்­பி­ன­ராக நான் பாரா­ளு­மன்­றத்தில் பணி­யாற்­றுவேன். நாங்கள் தேர்­தலில் 8 மாவட்­டங்­களை வெற்­றி­பெற்­றுள்ளோம். ஐக்­கிய தேசிய கட்சி 11 மாவட்­டங்­களை வெற்­றிக்­கொண்­டுள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் நாங்கள் தோல்­வி­ய­டைந்­துள்ளோம். இது மிகவும் கடி­ன­மான போராட்­ட­மாக அமைந்­தது" என்றார்.
கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments