சவுதி அரேபியாவில் வாடிக்கையாளர்களுக்காக வைக்கப்பட்டிருந்த உணவை எலி தின்றுகொண்டிருந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் ஜித்தா பகுதியில் பிரித்தானிய வகை உணவுகளை விற்பனை செய்யும் உணவகம் உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் தமக்கு தேவையான உணவை அவர்களே பரிமாறிக்கொள்ளவேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உணவகத்துக்கு சாப்பிட வந்த பெண்மணி ஒருவர் வாடிக்கையாளர்கள் பரிமாறிக்கொள்வதற்காக பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த உணவை எலி ஒன்று சாப்பிட்டுகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக தனது ஸ்மார்ட்போனில் அந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த உணவகம் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments