ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி நாட்டில் மலர வேண்டும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எக்னெலிகொட உட்பட பல கொலைகளில் கோத்தபாய ராஜபக் ஷ உட்பட ராஜபக் ஷ குடும்ப தலையீடு உள்ளதாக தற்போது தெளிவாகியுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,
எனது மக்களுக்கு எதிராக ராஜபக் ஷ குடும்பம் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஆனால் இன்று எக்னெலிகொட கடத்தப்பட்டு இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி மலர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
0 Comments