Subscribe Us

header ads

ஜனா­தி­பதி தலை­மையில் பிர­தமர் ரணிலின் ஐ.தே.மு. ஆட்சி நாட்டில் மல­ர­வேண்டும்


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்­கவின் ஐக்­கிய தேசிய முன்­னணி ஆட்சி நாட்டில் மலர வேண்டும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரி­வித்­துள்ளார்.
எக்னெலிகொட உட்­பட பல கொலை­களில் கோத்த­பாய ராஜ­பக் ஷ உட்­பட ராஜ­பக் ஷ குடும்ப தலை­யீடு உள்­ள­தாக தற்­போது தெளிவா­கி­யுள்­ளது என்றும் முன்னாள் அமைச்சர் தெரி­வித்தார்
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்­பான வழக்கு நேற்று முன்தினம் வியா­ழக்­கி­ழமை கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.
இதன் பின்னர் நீதி­மன்­றத்­துக்கு வெளியே கூடி­யி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் மத்­தியில் கருத்து தெரி­வித்த போதே முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.
மேலும் அவர் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

எனது மக்­க­ளுக்கு எதி­ராக ராஜ­பக் ஷ குடும்பம் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி நீதி மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஆனால் இன்று எக்­னெ­லி­­கொட கடத்­தப்­பட்டு இரா­ணுவ முகாமில் தடுத்து வைக்­கப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டது தொடர்பில் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.
எனவே எதிர்­வரும் காலங்­களில் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி மலர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments