Subscribe Us

header ads

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அசகாய சூரர் என்பதை மஹிந்த ராஜபக்ஷவுக்கு உணர்த்திவிட்டார்


மைத்­தி­ரி­பால சிறி­சேன அச­காய சூரர் என்­பதை அவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு எழு­திய கடி­தத்தின் மூலமும், அதனைத் தொடர்ந்து அவர் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யிலும், ஐக்­ கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­ பிலும் பொறுப்­பு­வாய்ந்த பத­வி­களை வகித்த இரு­வரை செய­லி­ழக்கச் செய்­ததன் மூலமும் நிரூ­பித்துக் காட்­டி­யி­ருக்­கிறார்.
அவர் மேற்­கொண்ட இந்த அதி­ரடி நட­வ­டிக்­கையின் விளை­வாக மஹிந்த ராஜ­ப­க் ஷவும், அவ­ருக்கு ஆத­ர­வாக செயல்­படும் இன­வாத அர­சி­யல்­வா­தி­களும் இப்­பொ­ழுது செய்­வ­த­றி­யாது திக்­கு­முக்­காடிப் போயி­ருக்­கின்­றார்கள்.

ஜனா­தி­பதி தமது ஆளுமை எத்­த­கை­யது என்­பதை உரிய முறை யில் செயலில் காட்­டி­யி­ருக்­கின்றார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், அமைச்­சரும், கண்டி மாவட்ட ஐ.தே.முன்­ன­ணியின் வேட்­பா­ள­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.
உடு­நு­வரைத் தொகு­தியில் கெலி­ஓய நகரில் நேற்று வௌ்ளிக்­கி­ழமை இரவு நடை­பெற்ற இறுதி தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே இதனைத் தெரி­வித்தார்.
அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,
நாட்டின் தேசிய ஒரு­மைப்­பாடு பற்­றியும் நாட்டு எல்­லை­களின் ஸ்திரத்­தன்மை பற்­றியும், நாட்டின் இறைமை பற்­றியும் போதிய புரிந்­து­ணர்­வின்றி செயல்­பட்­ட­வர்­க­ளா­கவே முன்னாள் ஜனா­தி­ப­தி­யையும், அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளையும் நாம் காண்­கின்றோம்.
அப்­பாவி நாட்­டுப்­புற சிங்­கள பௌத்த மக்கள் மத்­தியில் இன­வாதக் கருத்­துக்­களை விதைத்து அவர்­களை உசுப்­பேற்றி இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­திற்கு ஊறுவிளை­விக்­கவே முன்னாள் ஜனா­தி­பதி இன்­னமும் எத்­த­னித்துக் கொண்­டி­ருக்­கின்றார்.
ஜன­வரி 8ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட யுகப் புரட்­சிக்கு வழி­கோ­லி­ய­வர்­களை மறக்­காது, அதனை பாது­காக்க உத­விய தரப்­பி­ன­ருக்கு தாம் ஒரு­போதும் துரோகம் செய்­யப்­போ­வ­தில்­லை­யென்­பதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு அனுப்­பிய கடி­தத்தின் மூலமும், அதனைத் தொடர்ந்து மேற்­கொண்ட அதி­ரடி நட­வ­டிக்­கை­களின் மூலமும் உணர்த்­தி­யுள்ளார்.
தற்­பொ­ழுது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள கணிப்­பு­க­ளின்­படி ஐக்­கிய தேசிய முன்­னணி தேர்­தலில் 120 ஆச­னங்­களை வெற்றி கொள்­ளக்­கூ­டிய வாய்ப்­புகள் உள்­ளன. ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு தோல்­வியைத் தழு­வு­வது நிச்­ச­ய­மாகி விட்­டது.
ஆட்சி மாற்­றத்­திற்கு உதவிய, மக்கள் இந்தத் தேர்­தலில் தூர நோக்­குடன் நாட்டின் அபி­வி­ருத்­தியை நோக்­க­மாகக் கொண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணங்கிச் செல்லும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை மீண்டும் பிர­த­ம­ராக்­கு­வதில் முனைப்பாக இருக்கின்றனர்.

Post a Comment

0 Comments