Subscribe Us

header ads

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பெரும் ஜனத்திரளுக்கு மத்தியில் பிராசரக் கூட்டம்

-Irshard Rahumathullah-


எதிர்வரும் 17 ஆம்திகதி இடம் பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யாணைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பெரும் ஜனத்திரளுக்கு மத்தியில் பிராசரக் கூட்டங்கள் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் சிலவாத்துறையில் பல்லாயிரக்கணக்கான மக்கள்  இந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

லெிலமடை பிரதேச சபையின் பிரதி தலைவர்,உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.வேட்பாளர்களான ராஜன் மார்க்,கமலநாதன் விஜின்தன்,வீ.ஜயதிலக,தேசமான்ய யஹ்யான் ஆகியோரும் இதன் போது உரையாற்றினர்.

முசலி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் முஹம்மது ஜசீல்,சிலாவத்துறை கடற்றொழிலளர்கள் சங்கத்தின் தலைவர் அனாப்தீன் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று இணைந்து கொண்டார்.

வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில் –

இந்த மண்ணை பாதுகாக்க நாம் போராட்டங்களை நடத்துகின்ற போது,இதனை காட்டிக் கொடுத்து முஸ்லிம் சமூகத்துக்கு துரோகத்தை செய்யும் ஒருவராக இந்த பிரதேசத்தில் உள்ள ஒருவர் செயற்பட்டுவருகின்றார்.மக்களது வாக்குகளை அவருக்கு பெற்றுக் கொடுத்து அவரை பாராளுமன்றம் அழைத்துச் சென்றோம்.ஆனால் அவர் செய்த துரோகத்தனம் மன்னிக்க முடியாது.அவருக்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கதவு முடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

வங்காளையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில்-

கடந்த 30 வருடகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நீங்கள் வாக்களித்து உங்களது கைகளின் ரேகைகள் அழிந்து போயுள்ளன.இனியும் நீங்கள் வீட்டுக்கு வாக்களித்தால் எதனை பெறப் போகின்றீர்கள்.மீண்டும் இவர்களுக்கு தான் வாக்களிப்பீர்கள் எனில் நீங்களே உங்களது சமூகத்திற்கு துரோகத்தை இழைத்தவர்களாக ஆகிவிடுவீர்கள்,வேட்பளார் ராஜன் மார்க் மக்களுக்கு  பணியாற்றக் கூடியவர்,மீனவர் சங்க தலைவராக இருந்து கொண்டு பல சேவைகளை செய்துள்ளார்.அவரைப் போன்றவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் .

எருக்கலம்பிட்டியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில் –
இந்த எருக்கலம்பிட்டியின் அரசியல் வரலாற்றில் இன்றைய தினம் என்பது வரலாற்று பதிவாகும்.இந்த கிராமத்தின் எத்தனையோ அபிவிருத்தி பணிகளை நாம் செய்ய முற்பட்ட போது அதனை இந்த மக்கள் பெற்றுக்கொள்ளவிடாது சிலர் தடுத்தனர்.இதனால் இந்த மக்கள் கடந்த 5 வருட காலங்களுக்குள் பல அபிவிருத்திகளை இழக்க நேரிட்டதாகவும் இங்கு கூறினார்.







Post a Comment

0 Comments