இணையம் ஊடாக செய்யப்படும் பிரச்சாரங்களை தடுக்க முடியாது என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதியுடன் சகல தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது.
எனினும் இணைய சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களை தடுக்க முடியாது தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முகநூல் மற்றும் டுவிட்டர் மூலமான பிரச்சாரங்களை தடுத்து நிறுத்த சாத்தியமில்லைஎன சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 Comments