Subscribe Us

header ads

வஸீம் தாஜுதீன் எமது நெருங்கிய நண்பன் – நாமல் ராஜபக்ஷ


கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்துடன் தமது குடும்பத்திற்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தான் கடுமையாக நிராகரிப்பதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷ தெரிவித்துள்ளார்.
வஸீம் தாஜுதீன் தமது குடும்ப நண்பன் எனவும் நாமல் ராஜபஷ பீபீசி செய்தி சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் தெரிவித்தார்.
அவரது மரணம் தொடர்பாக அநீதி இழைக்கப்பட்டிருந்தால், நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதனை அரசியலாக்குவது அவரது குடும்பத்துக்கு செய்யப்படும் அநீதியாகும் என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
விசாரணைகள் இன்னும் பூர்த்தியடையாத நிலையில் ராஜபக்ஷ குடும்பத்துக்கு விரல் நீட்டுவதால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தாஜூடீனின் குடும்பத்தினருக்கு எந்தவித நியாயமும் கிடைக்கபோவதில்லை எனவும் நாமல் ராஜபஷ மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments