கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் பொரல்லை கூட்டமொன்றில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கியினால் அப்பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளில் இன்று நடைபெறும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இன்று காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1.15 மணிவரை இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளருக்கு இரு தடவைகள் அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெ அச்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் இது தொடர்பில் வினவியபோது, இந்த கூட்டம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும், அந்த நேரத்திலேயே பொலிஸாருக்கு அவர் இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கியதாகவும் ஆணையாளர் கூறியுள்ளார்.
இருப்பினும், பிற்பகல் 1.00 மணியளவிலும் இக்கூட்டம் நடைபெறுவதாக அப்பிரதேசவாசிகள் கூறியதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
0 Comments