Subscribe Us

புத்தளம் ஸாஹிரா கல்லூரி போட்டியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கல்வி அமைச்சின் அனுசரனையுடன் டோக்கியோ சீமெந்து நிறுவனம் சுவர்ணவாஹினி தொலைக் காட்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய2014 ஆம் ஆண்டுக்கான அறிவுக் களஞ்சிய போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி தேசிய மட்டத்தில் தலை சிறந்த,முன்னணி பாடசாலைகளுடன் போட்டியிட்டு மூன்றாம் சுற்றுக்குத் தெரிவாகியமை அனைவரும் அறிந்ததே.
போட்டியாளர்களுக்கான சான்றிதழ்கள் இன்று (24.08.2015) அதிபர் எஸ்.ஏ.சி. யாகூப், உதவி அதிபர் எம்.எச்.எம்.நபீல். ஆசிரியர் ஐ.அக்பர் ஆகியோரால் வழங்கப்பட்டன.


-Mohamed Muhusi-

Post a Comment

0 Comments