Subscribe Us

header ads

ஜனநாயக அரசியல் புரட்சியில் பங்கேற்ற ஹக்கீம், ரிஷாத் புதிய நல்லாட்சியில் ஓரங்கட்டப்படல்



புதிய அமைச்சரவையில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டாலும் சக்திமிக்தானதும் செயற்பாட்டுடன் கூடியதுமான அமைச்சுகள் வழங்கப்படுமா என்பது இன்று கேள்விக்குறியாகி விட்டன.

சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு இன்றைய நிலையில் பெரிதாகத் தேவையில்லை என்ற ஒரு புறந்தள்ளப்பட்ட நிலையிலேயே இந்தக் கட்சிகள் புதிய ஆட்சியாளர்களால் நோக்கப்படுமானால் அதன் அறுவடைகளை இன்றல்ல.. எதிர்காலத்தில் அரசாங்கம் அனுபவிக்கும்.

ஜனவரி 8 இல் இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக ரீதியிலான அரசியல் புரட்சியில் முஸ்லிம் கட்சிகளினதும் முஸ்லிம் மக்களினதும் பங்களிப்பு இன்றியமையாதன. இதனை அரசாங்கம் மறந்து விடக் கூடாது.

ஆனால், நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் பின்னரான புதிய அமைச்சரவையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளை புறந்தள்ளி, அவர்களது அமைச்சுகளில் பலவீனங்களை ஏற்படுத்தி வழங்க முயற்சிப்பது ஒரு சிறந்த ராஜதந்திரம் அல்ல.

பொரும்பான்மைச் சிங்கள உறுப்பினர்களை அதிகளவில் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து பெரும்பான்மை பலம் கொண்ட ஓர் அரசாங்கத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்ற இன்றைய நிலையில் முஸ்லிம் தலைமைகளைப் புறந்தள்ளும் முயற்சி பலித்தால் அதற்கான விலை கொடுத்தலை என்றோ ஒரு நாள் இந்த அரசே ஏற்க வேண்டும்.

கடந்த காலங்கள் போன்று முஸ்லிம் தலைமைகளை கறிவேப்பிலைகளாக இன்றைய நல்லாட்சியாளர்களும் நினைத்தால் அதன் பெயர் நல்லிணக்கம் கொண்ட சகவாழ்வு ஆட்சியும் அல்ல. அரசும் அல்ல. 

மஹிந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு வழங்கப்பட்ட அமைச்சு அதிகாரங்கள் போன்று பஷில் ராஜபக்க்ஷவுக்கு கூட அன்று இருந்திருக்க முடியாது. அந்தளவு அதிகாரத்துடன் ரிஷாத் அன்றைய அரசின் ஒரு அதிகாரமிக்க செல்லப்பிள்ளையாக திகழ்ந்தார்.

ஆனால், புதிய அமைச்சரவையில் அவருக்கு வழங்கப்படவுள்ள அமைச்சு கைத்தொழில் வர்த்தக அமைச்சாக இருந்தாலும் அதன் கீழான பல நிறுவனங்கள் பிரிக்கப்பட்டு வேறு அமைச்சுகளுடன் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. வெளிநாட்டு ஏற்றுமதி (ஏற்றுமதி அவிபிருத்திச் சபை) உட்டபலான பல முக்கிய நிறுவனங்கள் அந்த அமைச்சிலிருந்து நீக்கப்பட்டு ஏனைய அமைச்சுகளுடன் (சிங்களவர்களுக்கு) இணைக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கபப்படுகிறது.

எனவே, அகில இலங்கை மக்க்ள காங்கிரஸ் தலைவரான ரிஷாத் பதியுதீனுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சானது வெறும் கதிரை அலங்கரிப்பு அமைச்சாகவும் அமையலாமே தவிர ஆக்கத் திறன்கொண்ட அமைச்சாக காணப்படாது போல் தெரிகிறது.

சில நாட்களுக்குகு முன்னர் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை கொழும்பில் சந்தித்த ரிஷாத் பதியுதீன் இது தொடர்பில் தனது கவலையை வெளிட்டுள்ளமை குறிப்பிடத்க்கது.

செயற்றிறன் கொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீனை வன்னி மக்களுக்குச் சேவை செய்வதிலிருந்து தடுக்கும் நடவடிக்கையாக இதனை நோக்கலாம்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமைலைமையின் நிலைப்பாடு அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட அல்லது மரத்தால் வீழ்ந்தவனை மாடு மிதித்த கதையாகவே அமைந்துள்ளது.

ரவூப் ஹக்கீமுக்கு மஹிந்த அரசில் நீதியமைச்சு வழங்கப்பட்டாலும் அது ஒரு செயற்றின் மிக்க அமைச்சாக காணப்படவில்லை. அவரால் எதனையும் செய்ய முடியாத நிலைமையே இருந்தது. ஜனவரி - 8 ஜனநாயக அரசியல் புரட்சிக்குப் பின்னர் அவருக்கு அதிகாரமிக்க செயற்றிறன் கொண்ட அமைச்சு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், புதிதாக அமைக்கப்படவுள்ள அமைச்சரவையிலும் ரிஷாத்துக்கு நடந்த கதையே அவருக்கும்…. இறுதியாக பதவி வகித்த அமைச்சுகளில் நகர அபிவிருத்தி அமைச்சு என்ற பாரிய அமைச்சு அவரிடமிருந்து பறிக்கப்படலாமென கூறப்படுகிறது. நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சுடன் கட்டமைப்பு தொடர்பான சக்தியற்ற, தொழில் வழங்க முடியாது ஓர் அமைச்சுக்கு அவர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஹக்கீமும் ரிஷாதும் இல்லாவிட்டால் இன்று மைத்திரியும் இல்லை. மஹிந்தவும் இல்லை. நல்லாட்சியும் இல்லை என்பதனை சதிகாரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேவேளை, முஸ்லிம்களை வேப்பிலைகளாகப் பயன்படுத்த முடியுமென்ற நம்பிக்கையை தென்னிலங்கைச் சிங்கள சக்திகளிடமும் சிங்கள அரசுகளிடமும் வளர்த்தவர்கள் கூட எமது ஓரிரு முஸ்லிம் அரசியல்வாதிகளே என்பதனையும் நிராகரித்து விடமுடியாது.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Post a Comment

0 Comments