கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பரீட்சை நிலையத்திலிருந்து வெளியேறிய மாணவன் மீது இனந்தெரியாதோர் வாள்வெட்டு மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் நேற்று பகல் மினுவாங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மூச்சக்கர வண்டியில் வந்த மூவர், குறித்த மாணவன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த குறித்த மாணவன் மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையடுத்து மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 Comments