Subscribe Us

header ads

ரணில் மீண்டும் பிரதமரானால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்


எதிர்­வரும் தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரானால் நாட்டின் பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்தல் ஏற்­படும். நாட்­டுக்கு எதி­ரான சட்­ட­மொன்று பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்டால் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் பிர­காரம் ஜனா­தி­ப­தி­யினால் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடி­யாது என முன்னாள் அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும தெரி­வித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,
2002 ஆம் ஆண்டு ரணில் விக்­கி­ர­சிங்க பிர­த­ம­ராக இருந்­த­போது பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­யாமல் இர­க­சி­ய­மாக விடு­தலை புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுடன் ஒப்­பந்­த­மொன்றை செய்­து­கொண்டார். இந்த ஒப்­பந்தம் நாட்டின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக இருந்­த­மை­யினால் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க இரண்டு வரு­டங்­களில் பாரா­ளு­மன்­றத்தை கலைத்­து­விட்டார்.
ஆனால் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­தி­னூ­டாக ஜனா­தி­ப­திக்கு எந்­த­கா­ரணம் கொண்டும் பாரா­ளு­மன்­றத்தை நான்­கரை வரு­டங்­க­ளுக்கு முன் கலைக்க முடி­யாது.
மேலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்­வரும் தேர்­தலில் பிர­த­ம­ரானால் தேசிய அர­சாங்­க­மொன்றை உரு­வாக்­கு­வ­தாக கூறு­கின்றார். தற்­போது தேசிய அர­சாங்­கத்­தி­லுள்ள கட்­சி­க­ளான ஜாதிக ஹெல உறு­மய ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஆகிய கட்­சி­க­ளுக்­கி­டையில் கொள்கை ரீதியில் பாரிய வேறு­பா­டுகள் இருக்­கின்­றன. இந்­நி­லையில் இவர்­களால் நாட்­டிற்கு தேவை­யான எந்த சட்­டத்­தையும் உரு­வாக்க முடி­யாமல் குழப்­ப­மான நிலைமை ஏற்­படும்.
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­வித்­துள்ள கோரிக்­கை­களை பெற்று கொடுத்தால் நாட்டில் ஏற்­படும் நிலை­மையை மக்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.ரணில் விக்­கி­ர­ம­சிங்க இரண்டு வரு­டங்கள் பிர­தமர் பதவி வகித்து வடக்கு கிழக்கில் விடு­தலை புலி­களின் நிர்­வா­கத்தை ஏற்­றுக்­கொண்டு ஒப்­பந்தம் செய்­து­கொண்டு நாட்டை இரண்­டாக பிள­வு­ப­டுத்தும் நிலை­மையை ஏற்­ப­டுத்­தினார்.
இம்­முறை பொருத்­த­மில்­லாத கட்­சிகள் மற்றும் நபர்­களை இணைத்துக் கொண்டு அமைக்­க­வி­ருக்கும் குழப்­ப­க­ர­மான அர­சாங்­கத்­திற்கு பதி­லாக நிரந்­த­ர­மான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்கு மக்கள் அணி­தி­ரண்­டுள்­ளனர்.
மேலும் உலகில் முதற்­த­ட­வை­யாக பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு அதி­கா­ர­முள்ள நிர்­வாக எல்­லை­யொன்று இருப்­ப­தாக சட்­ட­பூர்­வ­மாக ஏற்­றுக்­கொண்­டவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கதான்.
எனவே எதிர்­வரும் தேர்­தலில் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நாட்டிற்கு அச்சுறுத்தலான சட்டங்களை இயற்றும் போது 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது.அத்துடன் அது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையும் என்றார்.

Post a Comment

0 Comments