இதுவரை காலம் நடைபெற்ற தேர்தல்களை விட இம்முறை நடைபெறும் பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் பல இம்முறை பொது தேர்தலில் போட்டியிடுகின்றமையே இதற்கான முக்கிய காரணம் என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
முதல் தபால் மூலம் வாக்களிப்பின் முடிவுகள் 12 மணியளவில் வெளியிடுவதற்கே வாய்ப்புகள் காணப்படுவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
18 மாவட்டங்களின் முடிவுகள் 18ஆம் திகதி 12 மணியளவிலேலும் வழங்குவதற்கு முடியாமல் போகலாம்.
வாக்குகளின் இறுதி முடிவுகளை வழங்கும் போது 18ஆம் திகதி நள்ளிரவை கடக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் விதிமுறைகளை மீறி கைது செய்யப்படுவர்களுக்கு பிணை வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகளுக்காக, 75000 பொலிசார் பணியாற்றி வருவதாகவும், இவர்களில் 63000, போலீஸ்காரர்கள், 7000 சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், 4,000 விசேட அதிரடிப் படையினரின் மற்றும் 161 கலகம் அடக்கும் படையினர் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய
0 Comments