Subscribe Us

தேர்தலில் படுதோல்வியடைந்த சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி


நடந்து முடிந்த எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஜன­நா­யகக் கட்சி படு தோல்­வி­ய­டைந்­துள்­ளது. ஜன­நா­யகக் கட்­சியின் சார்பில் கொழும்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்ட கட்­சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவும் படு தோல்­வி­ய­டைந்­துள்ளார்.

இம்­முறை கொழும்பு மாவட்­டத்தில் வெறு­மனே 5,238 வாக்­கு­களை மட்­டுமே ஜன­நா­யகக் கட்சி பெற்­றுள்­ளது. அது மட்­டு­மன்றி நாட­ளா­விய ரீதி­யிலும் மிகவும் குறைந்­த­ள­வி­லான வாக்­கு­க­ளையே ஜன­நா­யகக் கட்சி பெற்­றுள்­ளது.
கம்­பஹா மாவட்­டத்தில் 4,706 வாக்­கு­களை மட்­டுமே ஜன­நா­யகக் கட்சி பெற்­றுள்­ளது. அந்த மாவட்­டத்தில் சரத் பொன்­சே­காவின் பாரியார் அனோமா பொன்­சேகா போட்­டி­யிட்­டி­ருந்தார். அவரும் படு­தோல்­வி­ய­டைந்­துள்ளார்.
கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யுடன் இணைந்து ஜன­நா­யக தேசியக் கூட்­டணி என்ற பெயரில் போட்­டி­யிட்ட சரத் பொன்­சே­காவின் கட்சி நாட­ளா­விய ரீதியில் ஏழு ஆச­னங்­களைப் பெற்­றி­ருந்­தது. 110683 வாக்­கு­களை பெற்று இரண்டு ஆச­னங்­களை பெற்­றி­ருந்­தது.
எனினும் இம்­முறை ஒரு ஆச­னத்­தை­யேனும் அக்­கட்­சி­யினால் பெற முடி­ய­வில்லை.கடந்த 2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தலில் சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments