Subscribe Us

"ஜன­வரி 8 புரட்­சியை தொடர மக்­கள் எமக்கு அங்­கீ­காரம்''


ஜன­வரி எட்டாம் திகதி நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட புரட்­சியை முன்­கொண்டு செல்லும் வகை­யிலும் நல்­லாட்­சி­யையும் இணக்­கப்­பாட்டு செயற்­பாட்­டையும் தொடர்­வ­தற்கும் பெரும்­பான்­மை­யான மக்­களின் அங்­கீ­காரம் கிடைத்­துள்­ள­து­ என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.
நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து சிறந்த சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­ப­வ­துடன் இணக்­கப்­பாட்­டுடன் கூடிய அர­சாங்­கத்தை உரு­வாக்­குவோம். அனை­வ­ருக்கும் சம சந்­தர்ப்­பங்­களை வழங்கும் புதிய நாட்டை கட்­டி­யெ­ழுப்­புவோம் என்றும் பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார்.
இது தொடர்பில் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது ஜன­வரி எட்டாம் திகதி நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட புரட்­சியை முன்­கொண்டு செல்லும் வகை­யிலும் நல்­லாட்­சி­யையும் இணக்­கப்­பாட்டு செயற்­பாட்­டையும் தொடர்­வ­தற்கும் பெரும்­பான்­மை­யான மக்­களின் அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது.
தேர்தல் காலத்தில் மக்­களின் வெற்­றிக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்ட அனைத்து தரப்­பி­ன­ருக்கும் எனது நன்­றியை தெரி­விக்­கின்றேன். நீதி­யா­னதும் நேர்­மை­யா­ன­து­மான தேர்­தலை இம்­முறை நடத்த முடிந்­துள்­ளது. அவ்­வா­றான ஆரோக்­கி­ய­மான சூழலை பாது­காத்­துக்­கொள்­வது எமது கட­மை­யாகும்.
தற்­போ­தைய நிலையில் வெற்­றி­யா­ளர்கள் தோல்­வி­யா­ளர்கள் என எவரும் பிரிந்து செயற்­ப­ட­வேண்­டி­ய­தில்லை. ஒரு தாயின் பிள்­ளை­க­ளாக புதிய அர­சியல் கலா­சா­ரத்தை உரு­வாக்க இணைந்து செயற்­ப­டுவோம். புதிய யுகத்தின் சவால்­க­ளுக்கு முகம் கொடுத்து எமது தேசத்தை உயர்ந்த இடத்­துக்கு கொண்டு செல்ல இணைந்து செயற்­ப­டுவோம்.
அவ்­வா­றான சவா­லான செயற்­பாட்டை முன்­னெ­டுக்க எம்­முடன் இணைந்து செயற்­ப­டு­மாறு உங்கள் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கின்றேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவோம். இணக்கப்பாட்டுடன் கூடிய அரசாங்கத்தை உருவாக்குவோம். அனைவருக்கும் சம சந்தர்ப்பங்களை வழங்கும் புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்.

Post a Comment

0 Comments