Subscribe Us

header ads

எதிர்காலத்தில் நபிகள் நாயகத்தை கேலி செய்யும் விதத்தில் எந்த கேலி சித்திரங்களையும் வெளியிட மாட்டோம் சார்லி ஹெப்டோ பகிரங்க அறிவிப்பு!



சார்லி ஹெப்டோ என்ற பிரான்சை சார்ந்த கேலி சித்திர பத்திரி கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் மிக பெரிய கொந்தளிப்புகளை உருவாக்கியது 

ஆம் முஸ்லிம்கள் உயிருக்கு உயிராய் மதிக்கும் நபிகள் நாயகத்தை பல்வேறு கால கட்டங்களில் கேலி சித்திரமாக வரைந்து முஸ்லிம்களின் உணர்வுகளோடு விளையாடியது

அண்மையில் நபிகள் நாயகத்தின் கேலி சித்தரத்தை வெளியிட்டதர்காக சில உணர்வு உள்ள முஸ்லிம்கள் அந்த பத்திரிகைக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர் 

அப்போதும் திருந்தாத அந்த பத்திரிகை ஏட்டிக்கு போட்டியாக நபிகள் நாயகத்தின் கேலி சித்திரங்களை சுமந்த பல மில்லியன் பிரதிகளை வெளியிட்டு மேலும் முஸ்லிம்களை விமர்ச்சித்து

இப்படி முஸ்லிம்களை விமர்ச்சிப்பதையும் நபிகள் நாயகத்தின் ’கேலி சித்திரங்களை வெளியிட்டு முஸ்லிம்களை வெறுப்பு ஏற்றுவதையுமே தொழிலாக கொண்டிருந்து சார்லி ஹெப்டோ தர்ப்போது இனிவரும் காலங்களில் நபிகள் நாயகம் தொடர்ப்பாக எந்த கேலி சித்திரங்களை வரைய மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது

சில மாதங்களுக்கு முன்பு சார்லி ஹெப்டோவின் தலைமை ஓவியர் இனி நபிகள் நாயகம் பற்றி எந்த கேலி சித்திரத்தையும் வரையபோவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார் 

தர்போது அந்த பத்திரிகையின் நிர்வாகமே  எதிர்காலத்தில் முஹம்மது நபியை கேலி செய்யும் விதத்தில் எந்த கேலி சித்திரத்தையும் வெளியிட மாட்டோம் என்ற கொள்கை முடிவை அறிவித்திருப்பது வரவேர்ப்புக்கு உரியதே

Post a Comment

0 Comments