சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் கல்லூரியின் முதல்வர் வகிதா பானு தலைமையிலான ஆராய்ச்சியாளகள் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஆராய்ச்சியாளர் மற்றும் அரசு ஆராய்ச்சி மையம் இணைந்து மாணவர்களுக்கான புதிய கண்டுபிடிப்புகள் மேம்படுத்தும் விதமாக பல்வேறு ஆராய்சிகள் செய்து வருகின்றனர்.
இந்த அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளினால் அதிர்வுகளை கொண்டு லேசர் முறையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தோனேஷியாவில் காணாமல் போன விமானத்தை குறிப்பாக கடல் பகுதியில் இந்த இடத்தில் விழுந்து உள்ளது என்று துல்லியமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து கூறினர். இதை கொண்டு அந்த விமானத்தை மீட்டனர்.
உலக நாடுகள் அனைத்தும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு கண்டுபிடிக்க முடியாத விமானத்தை சேலம் அரசு பொறியியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். தற்போது விமான மீட்புக்கு உதவி உள்ளனர்.
இது குறித்து சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் வகிதா பானு கூறியதாவது:–
சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் மேம்படும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி குழுவினர் ஆகியோர் இணைந்து அறிவியல் சம்பந்தமாக ஆராய்ச்சிகள் செய்து வருகிறோம்.
இதை மேம்படுத்தும் விதமாக ஒலி மற்றும் ஒளி அதிர்வுகளை கொண்டு பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு உள்ளோம்.
அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தோனேஷிய விமானம் காணாமல் போன போது உலகில் எந்த நாடும் கண்டுபிடித்து கொடுக்க முடியாமல் போன போது நாங்கள் அதிர்வலைகளை கொண்டு குறிப்பிட்ட இடத்தில் விமானம் விழுந்ததாக கூறிய போது அந்த இடத்தில் தேடி விமானத்தை கண்டு பிடித்தனர். இதே போன்று தற்போது இந்திய விமான படைக்கு சொந்தமான விமானத்தை தற்போது அதிர்வலைகளை கொண்டு எனது தலைமையிலான அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து குறிப்பிட்ட இடத்தில் இருப்பதை கூறி உள்ளோம். இதனால் இந்த பகுதியில் தேடி வருகின்றனர். விரைவில் இந்த விமானம் மீட்டு எடுப்பார்கள் என்று நம்பிக்கையாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறிவியல் ஆராய்ச்சி கதிர் வீச்சு அலைகளில் கண்காணிப்பாளரும் ஆராய்ச்சியாளருமான ஷியாம் அகமது கூறியதாவது:–
‘விமானம் கடலில் விழுந்து தண்ணீர் பட்டவுடன் கறுப்பு பெட்டி தனது வேலைகளை செய்ய ஆரம்பிக்கும். அந்த கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல்களை அனுப்பி கொண்டிருக்கும். அந்த செயல்பாடு 30 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். அதன் பின் செயல் இழந்து விடும்.
தற்போது எங்கள் ஆராய்ச்சி மூலம் நாங்கள் கதிர்வீச்சு சிக்னல் மற்றும் அதிர்வலைகள் சிக்னல் மூலம் விமானம் எங்கு உள்ளது என்று கண்டுபிடித்து உள்ளோம். அதை அரசுக்கு தெரிவித்து உள்ளோம். தற்போது கடலுக்கு அடியில் 930 அடி முதல் 940 அடி வரை ஆழத்தில் விமானம் இருக்கிறது.
கடலுக்கு அடியில் தரை பகுதியாக இல்லாமல் கரடு மேடு பள்ளம் உள்ளதால் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை கடலுக்கு அடியில் விமானம் சென்று கொண்டு இருக்கிறது.
கடல் எப்பவுமே நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை தனது தன்மையை மாற்றி கொண்டு வரும் சூழ்நிலையில் தற்போது சிக்னல் மாறுபட்டுக்கொண்டே இருப்பதால் மீட்கும் பணியில் சிரமம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. இதை கண்டறிந்து கூறி உள்ளோம். காணாமல் போன விமானத்தை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். விரைவில் விமானம் மீட்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.





0 Comments